Pages

Subscribe:

Friday, October 1, 2010

வீடுகாணலாம் - கவிதை

வீடுகாணலாம்
எங்கள் தேசத்திற்க்கு சென்று
நாங்கள் தவண்டு வளர்ந்த
வீட்டை காணலாம்
அன்னியர்கள் தாக்கியழித்து
எச்சங்களய் எங்கள்
உறவுகள் பெயர்களை கூறும்
நம் வீட்டை பாக்கலாம்
எங்கள் உறவுகள்
எங்கள் கண்முன்னே
இரத்ததை சிந்தி
தங்கள் உயிர் நீத்த
எங்கள் வீட்டை பாக்கலாம்
சேர்த்து வைத்திருக்கும்
கண்ணீருக்கு
விடை கொடுக்க
எங்கள் தேசம் சென்று
வீடுகாணலாம் 

2 comments:

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க..

Chitra said...

கவிதையில் இருக்கும் வலியும் வருத்தமும் புரிகிறது.