Pages

Subscribe:

Tuesday, August 31, 2010

இருள் - கவிதை


சோலையில் பூத்த மலர்களே
நீங்கள் கண்மூடி உறங்குங்கள்
எங்கள் நிலை பார்த்தால்
காலையிலையே
நீங்கள் வாடிவிடுவீர்கள்
ஆடை தரித்த எங்களூர்
இன்று குட்டி
கிரோஷிமாவாகிவிட்டது
எங்கள் நிலை கண்டு
கூவிக் கூவியே
நம்மூர்குயில்களின்
குரல்களும்
தேய்ந்து விட்டன
கரைந்த காகங்களும்
காலமாகிப் போய்விட்டன
அமாவாசை இரவில்
பூரணைச் சந்திரனை
எதிர் பார்த்து ஏமாந்து
போனவர்களாக நாம்!
விடிகின்றது தினமும்,
நமக்கில்லை........
இன்று வரையில்
இருட்டிற்குள்தான்
நம் விடிவும்...!
நாளை போர் தீர்ந்து
கண்ணீர் குறையுமா
நம் கண்ணில்..........?

சொந்தம் - கவிதை


உன்னை போல் எனக்கு
அழகான சொந்தம் யாருமில்லை
உன்னை இன்றி வேறு
சொந்தங்களை தேடியதும் இல்லை
என் உயிரினுள் உறைந்த
என் சொந்தமே
உன்னை தேடுகிறேன்
என் உயிர் போகும் வேளையிலும்
ஆனாலும் உன்னை காணவில்லை

என் உயிரில் கலந்து விட்ட
எனது உறவே
உன்னை வெளியில் தேடுவது
என் மடமையடி
எனினும் உனது சொந்தத்தை
எனது உள்ளம் தேடுகிறது
என் உயிருக்கு சொந்தகாரி நீயடி
எனது கல்லறையில் காத்திருக்கிறேன்
உன் உறவை எதிர் பர்ர்த்து
சொந்தம் கொள்ள ஒரு
முறையாவது வந்துவிடு
என் உயிரின் சொந்தக்காரியே...