நிலவிற்காய் ஏங்குகிறது வானம்
அமாவாசையில்!
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
இரவு வேளையில்!
விண்மீன்களுக்காய் ஏங்குகிறது முகில்கள்
மழைபொழியும் இரவில்!
உனக்காக ஏங்குகிறது என்னிதயம்
எல்லா காலங்களிலும்!
**************************
தினமும் காத்திருக்கின்றேன்
இரவுகளை நோக்கி!
கனவில் உன் முகம்
பார்க்க விரும்பியல்ல!
நிலவில் உன் முகம்
பார்க்க விரும்பியே!
********************
பட்டமரமாய் அலைந்தேன்!
பாலைவனம் தன்னில்,
தனிமையாய்!
தென்றலாய் நுழைந்து,
சோலைவனமாக்கினாய் என்னில்,
இனிமையாய்!
பாலைவனம் தன்னில்,
தனிமையாய்!
தென்றலாய் நுழைந்து,
சோலைவனமாக்கினாய் என்னில்,
இனிமையாய்!
2 comments:
கவிதை அழகாய் இருக்கிறது . உனக்கானவள் கிடைக்கக் வாழ்த்துக்கள்.
நன்றி அக்கா.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சும்மா எழுதியது
Post a Comment