Pages

Subscribe:

Tuesday, August 31, 2010

இருள் - கவிதை


சோலையில் பூத்த மலர்களே
நீங்கள் கண்மூடி உறங்குங்கள்
எங்கள் நிலை பார்த்தால்
காலையிலையே
நீங்கள் வாடிவிடுவீர்கள்
ஆடை தரித்த எங்களூர்
இன்று குட்டி
கிரோஷிமாவாகிவிட்டது
எங்கள் நிலை கண்டு
கூவிக் கூவியே
நம்மூர்குயில்களின்
குரல்களும்
தேய்ந்து விட்டன
கரைந்த காகங்களும்
காலமாகிப் போய்விட்டன
அமாவாசை இரவில்
பூரணைச் சந்திரனை
எதிர் பார்த்து ஏமாந்து
போனவர்களாக நாம்!
விடிகின்றது தினமும்,
நமக்கில்லை........
இன்று வரையில்
இருட்டிற்குள்தான்
நம் விடிவும்...!
நாளை போர் தீர்ந்து
கண்ணீர் குறையுமா
நம் கண்ணில்..........?

2 comments:

சாமக்கோடங்கி said...

நல்லா இருக்குங்க... உங்க கவிதை..

அன்புடன் பிரசன்னா said...

நன்றி நண்பா....